Monday, December 27, 2010

சின்னச் சின்ன சுகம் எனினும்..

புதிய தோட்டம்!..உலவுகின்றேன்;-வேப்பம் 
...பூக்கள் என்மேல் உதிர்கையிலே
விதியை மாற்றும் ‘சக்தி’ என்னுள்-தூவும்
...வெற்றி என்றே உணர்கின்றேன்!
நதியின் ஓரம் நடக்கையிலே,-குளிர்
...நடுக்கி உடம்பு சிலிர்க்கையிலே
புதிதாய்க் கவிதை கனன்றுவந்து-சூடு
..புணர்தல் ரசித்து மகிழ்கின்றேன்!
காட்டில் பசியால் மயங்குகையில்--ஒற்றைக்
..கருப்புக் குயிலின் கூவலிலே
மீட்டும் உணர்ச்சி பொங்கிவர,--என்
..மீண்ட சொர்க்கம் கண்டுகொண்டேன்!
நீண்ட வாழ்க்கை  வெம்மையிலே--அமுதம்
 ..நெஞ்சில்  ‘சொட்டும்” காட்சி இவை!
தீண்டும் ”சக்தி”க் கைபட்டால்--எந்தச்
... சின்ன சுகமும் இனிக்காதோ??

No comments:

Post a Comment