Thursday, December 23, 2010

இமயத்தில் அந்திப்பொழுது

அந்திப் பொழுதே!அழகிய பாடல்கள்
சிந்திடும்  சொல்போல் சிறந்தனை!-வந்தனை
சொன்னேன், அடைந்தேன் சுகம்! (1)
சுகமாய் இமயப்பூ ‘நீல்கமல்’*தன் தோகை..(*of very big size)
அகம்குளிர்ந்(து) உன்னைஅழைத்(து) ஆட்டும்!-தகவுடையோர்
சான்றோரைக் காண்பதொப்பத் தான்! (2)
தான்அடையும் சித்தர்காண் பேற்றைத் தக்கவைக்கத்
தானல்லோ கார்இருட்டைத் தாமதித்தாய்--கூனியைப்போல்?
பிந்தவைத்தாள் கண்ணனைஅப் பெண்!* (3)
பெண்போன்ற வானே! பெரும்போழ் துனைப்புல்லும்
கண்கதிர்ச் சூரியன், நீ காணாது-பெண்வேறு
தேடினன்என் றோஇச் சிவப்பு? (4)
சிவப்பான மேகங்கள்! செம்மைச் சிகரம்!
கவிவார்க்கும் ஓடைக் களிமீன்,-இவை,அந்தீ!
எல்லாமே உன்றன் எழில்! (5)
எழில்கூட்டும் உன்னால் இயற்கைப்பெண் மேகம்
இழைத்தபுதுத்  துப்பட்டா ஏந்திப்-பிழையாகப்
போர்த்தித் திரிகின்றாள் போ! (6)
போர்வை எனஇலைகள் போர்த்தும் மரங்களும்
கோர்வையாய் அந்திஒளி கொண்டு’மதி’--யார்போல்
கடன்வாங்கும் சாமர்த்யம் காண்! (7)
‘காண்போமா இவ்வந்தி கண்டபின்னே பேரொளியை?
பூண்இருள் ராட்சசிவாய் போம்- ‘ஐயம்-----தீண்டப்
பறவைஎலாம் ஓடுதே பார்! (8)
பார்க்கும் அலை,.அழகு! பாய்ந்(து)அடையும் ஆ(டு)அழகு!
சேர்ந்தோடும் நண்டுகளின் சீர்அழகு!---கூர்த்தமதி
பின்வானில் நாணுவதும் பீடு! (9)
பீடுடைக் காவியமே! பேசிநின்றேன் உன்னுடனே!
ஈடில் பரவசமும் எய்தினேன்!--தேடும்
அழகிலெதும் ஒப்பாமோ அந்தி!! (10)
* (In Himalayas many a time the அந்திப்பொழுது is long!.. it reminds  me that kooni' who begged Lord Krishna (in kamsan Story-, when He marched on to kill him-)- in so many words  to take her Sandal Paste and bless her!)-( and you know  that she became a girl by His Grace!)

No comments:

Post a Comment