Sunday, April 26, 2020


 My new Poem
**************
கற்பனைத் தேரேறி கவலையை மற;-
&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)26-04-20
கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
  கவலையும் உன்னைவிட் டோடி டாதோ?
அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
   அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ?
.
 விண்ணில்உன் கற்பனை பாய்ந்து நின்றால்
   மேவிடும் காட்சிகள் இன்பமடா!-மனக்
 கண்ணிலே தென்படும் அமுதக் குடம்
   கவலை- அசுரரை மாய்த்துவிடும்!

 வளைந்து வானிலே பாயும்அந் நாரைகள்
    மாயையடா இந்த உலகம் என்னும்!
 உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம்
    ஒன்றாக விண்ணிலே தேய்ந்து விடும்!!