Sunday, August 5, 2012

கணினி நொந்து பேசுகின்றேன்!

கணினி நொந்து பேசுகின்றேன்!

என்ன தந்திர உலகமடா!-மனிதா!
.. இதுவும் உனக்கொரு பிழைப்போடா?
என்னில் இருக்கிற பணந்தன்னை-ஒரு
.. எண்ணைக்*கொடுத்தபின் எடுக்கின்றாய்;
வன்ன ஆமையின்  முட்டைகண்டே
.. வாகாய்ப் பாம்புமே திருடுதல்போல்
உன்னிப் பாய்உனைக் கவனித்தே
..ஒருவன் உன்பணம் கொள்ளைசெய்வான்!..(என்ன..)
* ஏ.டி.எம்-பாஸ்வர்டு

கன்னிப் பெண்களின் வரன்தேட,
.. கார்டு மூலமே பொருள்வாங்க,
முன்னம் பாடிய பலர்பாடல்
.. மூன்று வேளையும் கேட்டுவிட,
சின்னத் தகவலும் *உறவினர்கண்....(*ஈமெயில்)-
.. செலவே இன்றிநீ சேர்த்துவிட,
என்றே எத்தனை உதவிசெய்தேன்!
.. என்னுள் கிருமிகள்* புகுத்துவதோ?..(என்ன..)
*(வைரஸ்)

என்னைத் தட்டியே முழுஉலகை
.. எட்டிப் பார்த்துமே மகிழ்கின்றாய்!
என்ன படிப்புமே என்மூலம்
.. எளிதில் கற்றுநீ வாழ்கின்றாய்!
உன்றன் பேரனும் தொலைதூரம்
.. உள்ள பாட்டனைக் காண்கின்றான்!*.....(*Chat மூலம்)-
என்ன செய்தும்என்? இதோபரி(சு)என்***
.. றெங்கோ ஒருவனை ஏய்க்கின்றாய்!*...(என்ன..)
(* by Fraud emails)-

காலை யில்காப்பி! பின்கணினி !
.. கடையில் வறுவலை  வாங்கிடவும்,
ஓலை இன்றியே கற்றிடவும்,
.. ஒற்றைக் காசுமே தராமலதை
நாலைந் துபேர்க்குமே விற்றிடவும்,
.. நல்ல   'கொள்ளைகள்‘அடிக்க-எனை
வேலை செய்யவே வைத்துவிட்டாய்;
.. விஷமம் செய்வதேன்  ‘செக்ஸ்- ‘இழை’யில்?’..(என்ன..)

ஸீரோ(‘0’)- ஒன்றையே உண்கின்றேன்!
.. சிறப்பாய் உனக்கென உழைக்கின்றேன்!
யாரோ தொடினும் வரமாட்டேன்!
.. எனக்காய்க் குறிப்பு*எண்  நீதந்தால்!...(*பாஸ்வொர்ட்)-
நேராய் உலகினை வலம்வருவேன்;
.. நிறைய  ‘கூகிலில்’* பொருள்தருவேன்;..(*google)-
சீராய் என்னைநீ வைத்திலையேல்
.. சிறப்பும் உனக்குமே வந்திடுமோ?...(என்ன..)