19-11-25
முன்னர்பெற்ற மோதகம் முற்றுமுண் ணாமலே
இன்றுவரும்ஏ ழைக்காய் இருத்தினை—என்னை
வசப்படுத்திக் காக்கின்ற
வள்ளல்நீ -என்றன்
தசச்செய்யுள் வாழ்கஎனச்… சாற்று!..
அத்தாழநல்லூர் அன்னையே!
…………………………………………………………………………..(கவியோகி வேதம்)19-08-25
முத்தைப்போல் புன்னகை,
முதுகிலோ வஞ்சக்கண்,
முரடர்கள் நடுவில்நான்
ஏனம்மா?
முடியாத
போதிலும்,சலிக்கின்ற வேளையும்,
முனகலுடன்
கழிக்கிறேன் பாரம்மா!
செத்தையும்
சிலசமயம் குளிர்காயப் பயன்படும்;
சிலமனிதர் ஒன்றுக்கும் உதவாரே!
சிறப்பான
பிறப்பைநீ எனக்கிங்கே அளித்துமே,
சீர்பெற்ற உற்றாரை அளித்திலையே!
கெத்தாய்என் ஊழ்-எனை
அச்சுறுத்தும் போதிலே
கிரணம்போல் வந்தேநீ
காவல்செய்வாய்;
கீழ்மேலாய் உன்நெற்றி
தொட்டொரு சுட்டிகண்டேன்
கிண்ணென்(று)அவ் வைரக்கல் கவர்ந்ததே!
அத்தாழ நல்லூரில் பெருமாளின் மார்புறை
அன்னையே என்மஹா
லட்சுமியே!
ஆதரவாய் என்பக்கம்
நீயிருந்தால் போதுமே!
அகிலத்தை வெற்றிகொள் வேனே! —1)…
…
2 வன்முறை
காச்மீரில் வடக்கேயும் ஆள்பலி
வருந்தினோம்
கண்டுநாம் கண்முன்னே;
வைரம்போல் சுதந்திரம் பெற்றாலும் பயனென்ன?!
வாழ்வென்றால் அன்பிலையோ சொல்தாயே!!
கன்னலாம் விடுதலை
பலபேர்க்குத் தறுதலைக்
களமாகப்
போகுதே! அன்னையே!
காதில்உன் தோடுகள் கவிதையைக்
கிளப்பிடும்,
கணநேரம் அமைதியைத் தந்திடும்;
என்றாலும் அரசிலே நம்மவர் புகுந்தபின்
எத்தனை ஊழல்கள், மோசடி;
எப்போது நம்நாடு
சீர்பெறும் என்றுநம்
இந்தியா உலகின்முன் ஒளிபெறும்?
பொன்போன்ற நதியோரம் அமைந்தஎம் கோவிலில்
பொலிகின்ற பெருமாளின் மார்புறைப்
பூரணப் பூவே! இலக்குமித் தாயே!
புதிதாய்ஓர் ஆக்கினை
அருள்வாயே!!