கவியோகி வேதம்
என் கிராமத்து வீட்டில்1960-70வாக்கில் என் தாத்தாவையும்வீட்டையும்
கவனிக்க ஒருநல்லவேலைக்காரரிருந்தார். அவரைப்பற்றி
ஒருசித்திரம்..--
மீசை நாய்க்கர்
ஒருசுரங்கம்!-அவரின்
..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!
ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை
…”ஆண்டே” மீசை இவர் வளர்த்தார்!
இங்கிலீஷ் எழுத்து
“டபிள்யூ’போல்-ஐயா!
..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?
பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!
பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!”
என்றே கேட்டால்
சிரித்திடுவார்!-“கின்னஸ்”
..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!
இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,
..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்!
பாம்பாய் நெளியும்
மீசையைப்போல்-இவர்
..பத்து கலையும் அறிந்திடுவார்!
வீம்புக் கிதனைச்
சொல்லவில்லை-செய்யும்
..வேலை சொன்னால் மிகையுமில்லை!
ஈனும் பசுவுக்
கருகிருப்பார்!-முதுகை
..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!
பூனை உடலில்
புனுகெடுப்பார்!-நீரைப்
…பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!
காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்
…கரண்டி நெருப்பில் போடுகையில்,
வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்
..வட்டம் போடும் கலைதெரியும்!
ஜாதிச் சேவல் மடியில்வர-கேப்பை.
….ஜலம்கலந்தே ஊட்டுகையில்
ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ
..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!
விடலைப் பனையின்
குருத்தெடுத்தே-பாலர்க்கு
..விசிறி பண்ணித் தருகையிலோ
இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்
..ஈந்த ‘சபரி” முகம்தெரியும்!
மீசை வளர்க்கும் கலையிலும்தான்,–லட்சிய
..வேட்கை அன்றோ தெரிகிறது!
பூசை,’தெய்வம்’
இவர்அறியார்!-உழைப்புப்
…”பொழுதே” கடவுள் என்றறிவார்!
கரணை கரணை யாய்கைகள்!- நல்ல
..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!
கருத்த உருவம், “காளி’யைப்போல்!-எனினும்
..கருணை வடிவம் அவர்இதயம்!
.
மீசை நாய்க்கர் ஒரு சுரங்கம்!-
அவர்
மீசை, உழைப்பு,.. கலைஅரங்கம்..(கவிஞர் வேதம்)
No comments:
Post a Comment