வேள்விச்
சாம்பலில் ஃபீனிக்ஸ்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(கவிஞர் வேதம்)
உழைக்கத்
தெரிந்த வாலிபனே!-உன்னை
உலகம்
உயரே வைக்குமடா!
பிழைப்பில்
உழைப்பே பரிசென்னும்-ஞானம்
பிறந்தால்
வாழ்வே இனிக்குமடா!
வியர்வை உடம்பின்
கூட்டல்!-சோம்பல்
விடுத்தல், கழித்தல், இன்பமடா!
அயர்வே இல்லா
வீரம்-உன்னை
அறிஞர் புகழ வகுக்குமடா!
.
வெற்றி உழைப்பின்
சுரங்கமடா!-ஆர்வம்
விரியும்
நெஞ்சம் வைரமடா!
சுற்றம் கீழே
இழுத்தாலும்-துணிவாய்ச்
சுழன்று,
ஒளிர்ந்தே பயன்எடுடா!
எடிசன் உழைத்தான்
வெற்றிகண்டான்!-பொருள்
எத்தனை எத்தனை கண்டுதந்தான்!
முடியாத
துண்டோ உன்அறிவில்?-உழைப்பின்
முடிவில் இறைவன் வரம்தருவான்!
இந்திய சுதந்திரம்
எதன்விளைவு?-அதற்கு
எத்தனை
வீரர் பலிகொடுப்பு?
தந்தையாம்
காந்தியின் மனஉழைப்பு;-வேள்விச்
சாம்பலில் ஃபீனிக்ஸ்’ உயிர்த்திருக்கு!!-
*********************************************(கவிஞர்
வேதம்-)09-11-25
!
No comments:
Post a Comment