Sunday, November 9, 2025

 

வேள்விச் சாம்பலில்  ஃபீனிக்ஸ்!

  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(கவிஞர்  வேதம்)

உழைக்கத் தெரிந்த  வாலிபனே!-உன்னை

உலகம் உயரே  வைக்குமடா!

பிழைப்பில் உழைப்பே பரிசென்னும்-ஞானம்

பிறந்தால் வாழ்வே  இனிக்குமடா!

 

வியர்வை  உடம்பின்  கூட்டல்!-சோம்பல்

விடுத்தல்,   கழித்தல், இன்பமடா!

அயர்வே   இல்லா   வீரம்-உன்னை

அறிஞர்   புகழ  வகுக்குமடா!

.

வெற்றி  உழைப்பின்   சுரங்கமடா!-ஆர்வம்

  விரியும்   நெஞ்சம்  வைரமடா!

 சுற்றம் கீழே   இழுத்தாலும்-துணிவாய்ச்

சுழன்று, ஒளிர்ந்தே  பயன்எடுடா!

 

எடிசன்  உழைத்தான்  வெற்றிகண்டான்!-பொருள்

 எத்தனை எத்தனை கண்டுதந்தான்!

முடியாத துண்டோ உன்அறிவில்?-உழைப்பின்

முடிவில்  இறைவன் வரம்தருவான்!

 

இந்திய  சுதந்திரம்  எதன்விளைவு?-அதற்கு

  எத்தனை  வீரர் பலிகொடுப்பு?

தந்தையாம் காந்தியின் மனஉழைப்பு;-வேள்விச்

  சாம்பலில் ஃபீனிக்ஸ்’ உயிர்த்திருக்கு!!-

*********************************************(கவிஞர் வேதம்-)09-11-25

  !

 

 

 

 

 

No comments:

Post a Comment