Tuesday, April 3, 2018

பசுபதிவுகள்: 682. ஔவை துரைசாமி - 1

.                என் பழைய கிராமத்து வீடு  09-11-25

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)-

 

வாசற் புறத்தில்,- செண்பகப் பூக்கள்

   வாவா   என்றே   நம்மை அழைக்கும்;

ஆசை  கொண்டே  ரோஜாப் பூக்கள்  

  அன்புடன்    நெஞ்சைக்  கவர்ந்து   கொள்ளும் ; 

  

 பகலும் இரவும் பறவைக் கணங்கள்  

    பலவித  ராகத்தில்  கவிதை நெய்யும்;

குகைபோல் தெரியும்என்   தாத்தா இல்லம்

   கிராமப்   பகுதியின்  கொடை   வசந்தம்.

 

எத்தனை அறைகள் !எத்தனை ஜன்னல் !

.. எல்லாம் பார்த்தால் அதிசயப் பின்னல் !

. பித்தனைப்   போலே  குருவியை, கிளியை

..  பிரமிப்பாய்ப்  பார்த்துக் கொண்டி  ருப்பேன் .

 

  கொல்லைப் புறத்தின்   கதவு  திறந்து

    கூர்மையாய் ஆற்றின்  ஓசையைக்  கேட்பேன் ;

.. எல்லையில் லாத  இன்பம்  கொள்வேன் ;

   யாரும் அழைத்தால் கோபம் கொள்வேன்.  

 

. பார்க்கும் போதே நாரை  ஒன்று

  .. பச்சென்று   மீனை அலகில்    தூக்கும் .

. யார்க்கும்  அஞ்சா எருமை  ஒன்று

   எங்கிருந் தோவந்து நீரைத்  துளைக்கும். .

. .

காய்ந்த  மணலிலும் குழிகள்  தோண்டி

    கற்களைப்   படிபோல்  அடுக்கி  அடுக்கி

 பாய்ந்தே வருகிற தெளிந்த  நீரைப்

  பங்கு  போடுவர்  கிராமச்  சிறுமியர்..

 

என்னே   சொல்வேன் அன்றைய  அழகை!

  இன்றோ  வீடே சற்றே சிதிலம்!—ஓ!

முன்னாள் நினைவெலாம்   ஒதுக்கி விட்டேன் ;அதை

  முதியோர்  இல்லமாய் மாற்றி   மகிழ்ந்தேன் !(கவியோகி  வேதம் )-

     

--

 

No comments:

Post a Comment