Wednesday, May 30, 2012

ரமணத் தேன்கூடு!

ரமணத் தேன்கூடு!

அண்ணா மலையிலோர் தேன்கூடு!-உள்ளே,
.. அழகிய ராணி “ஈ” முனி.யோடு!....
‘ரமணம்’ சாய்ந்தே அமர்கிறது!-சமாதி
   . ரகசியம் பொங்கி வழிகிறது!
அமைதியிலோர் ‘அக்னியே’ பூக்கிறது!-(ஆம்)அது
   ..அவரது கண்ணாய் மலர்கிறது!
ஞானம் கமழ்ந்திடும் நந்தவனம்!-அந்த
   .ஞானியைச் சுற்றிப்பல் அன்புமனம்!
ஊனம்,..அமர்ந்தாலே ஓடிடுதே!-தேவர்
   .உலகம் நமக்குள் விரிகிறதே!
குகையுள் அலர்ந்தநல் தாமரையாம்!-ரமணர்
   .கூட்டிய ‘நிஷ்டை’ஓர்  பாற்கடலாம்!
திகைந்தனர் பக்தர்கள் சேவையிலே!-கூடித்
   .தெவிட்டா  அமுதம் பருகினரே!
குரங்குகள், நாய்கள், பசுக்களுமே-அருள்
   .குவிந்த ரமணர்ப் பசங்களுமாம்!
அருமை!.அவர்க்கெலாம் முன்னுரிமை!-மடி
   .அமர்ந்துமே உண்ணல் தனி-உரிமை!
ஒருசொல்,அறிவுரை ஏன்இல்லை?-கேள்விக்(கு)
   .ஒன்பது நாள்போல் பதில்இல்லை?
பெரிய மனிதரும் காத்திருப்பு!-ரமணரின்
    ‘ப்ரம்ம’ மவுனத்தில் விடையிருக்கு!
எத்தனை எண்ணம்!கலக்கங்கள்!-கண்ணுடன்
  .இழைந்து கலந்தால் மறைந்திடுதே!
முத்துக் குளிக்கவே வாருங்களேன்!-அட!
   .மூழ்கியே இன்பமாய்ச் சேருங்களேன்!!

No comments:

Post a Comment